கழிவறையில் நழுவி விழுந்த நபர்..Toilet-ஐ பழி வாங்கிய வினோதம் - தீயாய் பரவும் காட்சிகள்

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, பொது கழிவறையில் கால் நழுவி விழுந்ததால் ஆத்திரமடைந்த கூலி தொழிலாளி, சுத்தியலை கொண்டு தரை ஓடுகளை அடித்து உடைத்த காட்சி வைரலாகி வருகிறது.பாங்கோடு பகுதியில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிவறைக்கு சிறுநீர் கழிப்பதற்காக சென்ற கூலித் தொழிலாளி ஒருவர், கால் நழுவி விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சுத்தியலை கொண்டு கழிவறையின் தரை ஓடுகளை அடித்து உடைத்தார். தனது காயத்துக்கு காரணமான தரை ஓடுகளை உடைப்பேன் எனவும், தன்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது எனவும் கூறி இச்செயலில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்