வானதி சீனிவாசன் ஆபிசுக்குள் புகுந்து பின்னர் ரோட்டில் சடலமாக கிடந்தவர் உடலில் 'ஓம் சிவா' பச்சை... விசாரணையில் வெளியான தகவல்

x

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலத்திற்குள் புகுந்த மர்ம நபர், தமது உடலில், ஓம் சிவா என பச்சை குத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள், கடந்த திங்கட்கிழமை புகுந்த மர்ம நபர், உள்புறமாக பூட்ட முயன்றார். வானதி சீனிவாசனின் உதவியாளர், அந்த மர்ம நபரை அங்கிருந்து விரட்டியடித்தார். அதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அண்ணா சிலை ஜி.டி.மியூசியம் அருகே அரசு பேருந்து பின்சக்கரத்தில் படுத்து அந்த மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான சிசிடிவி பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த மர்ம நபரின் மார்பில் ஓம் சிவா என பச்சை குத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் யார், எதற்கான வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்