காருடன் 20 அடி ஆழ வாய்காலில் மூழ்கிய நபர்- உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்கள் -திக்திக் காட்சி

x

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில், 20 அடி ஆழமுள்ள வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் உள்ளே அமர்ந்திருந்த தொழிலதிபர் காருடன் நீரில் மூழ்க தொடங்கினார்.

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் இருவர் வாய்க்காலில் குதித்து, தொழிலதிபரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதையடுத்து, கிராம மக்கள் உதவியுடன் டிராக்டர் மூலம், கார் வாய்க்காலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்