"போட்டோவில் காதில் கம்மல் இருந்தால் உரிமைத்தொகை தர மாட்டாங்க பாட்டி..." நேக்காக கூறி கம்மலுடன் தப்பித்த கில்லாடி

x

தென்காசியில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வாங்கித் தருவதாக கூறி, மூதாட்டியிடம் கம்மலை திருடிச் சென்றவரை போலீஸ் தேடி வருகிறது. மாதாக் கோவில் தெருவை சேர்ந்த 80 வயதான மூதாட்டி கல்யாணி, தென்காசி வாய்க்கால் பாலத்தில் நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த ஒருவர், அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை வாங்கித் தருகிறேன் என்றும், அதற்காக போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். போட்டோ எடுக்கும் போது காதில் கம்மல் இருந்தால் தர மாட்டார்கள் என்று, கம்மலை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்