டிரைவர் வர லேட் ஆனதால் பஸ்ஸை எடுத்து ஓட்ட ஆரம்பித்த ஆசாமி.. அலறிய 50 பயணிகள்.. பரபரப்பு காட்சிகள்

x

திருத்தணியில், அரசுப்பேருந்தை திடீரென போதை ஆசாமி ஒருவர் இயக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்தில் திருவள்ளூருக்கு செல்லும் அரசுப்பேருந்து நின்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் 50 பேர் இருந்தனர். ஓட்டுநரும், நடத்துநரும் இல்லாத நிலையில், போதை ஆசாமி ஒருவர் திடீரென அந்த பேருந்தை இயக்கியுள்ளார். இதனை கவனித்த சக ஓட்டுநர்கள் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தால், சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்