பாலியல் புகாரில் சிக்கிய பெரியார் பல்கலை. பேராசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை

x

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கோபி என்பவர் வேதியியல் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் ஆராய்ச்சி பட்டப்படிப்பு படித்த மாணவியிடம் கோபி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கபப்ட்டது. இதனால் கோபியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கோபியை முழு நேர பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுத்த துணை வேந்தர், பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்