மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - கேரள முதலமைச்சருக்கு வயநாடு எம்.பி. ராகுல் காந்தி கடிதம்

x

கேரளாவில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பகுதிகள் தொடர்பான செயற்கைக்கோள் வரைபடத்தால் மக்கள் அச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வயநாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்க‌க்கூடிய பகுதிகள் தொடர்பாக, தொலை உணர்திறன் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வரைபடம் தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்கள், நிலங்களின் சர்வே எண்கள் இடம்பெற்றுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இதனால், முதற்கட்ட அறிக்கை குறித்து கருத்து கேட்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்