"அதிமுகவினர் இணைந்து செயல்பட்டால் மக்கள் வரவேற்பார்கள்" - பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன்

x

அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சக்தி கேந்திர கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், அதிமுகவினர் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்