எந்த ஆடை எடுத்தாலும் 4 ரூபாய்..4ரூ ஆடைகளுக்கு ஆசைப்பட்டு கைபேசி,பர்ஸ்களை விட்ட நபர்கள்

x

மன்னார்குடியில் உள்ள தனியார் ஜவுளி கடை ஒன்றில் 4 ரூபாய்க்கு ஆடைகள் வாங்க சென்ற பொதுமக்கள் தங்களின் விலை உயர்ந்த பொருகளையும் பணத்தையும் தவறவிட்டு சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரபல ஜவுளி கடையின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதலில் வரும் 400 நபர்களுக்கு எந்த ஆடை எடுத்தாலும் ஒரு ஆடை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள் காலை 8 மணி முதலே வரதொடங்கினர்.

இதனால் கடை அமைந்துள்ள ருக்மணிபாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடையிலும் ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது. கடையில் மலை போல் குவிக்கப்பட்ட ஆடைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

4 ரூபாய்க்கு ஆடை வாங்க வந்தவர்களில் சிலர் தங்களின் விலைஉயர்த்த கைபேசி, ரொக்க பணம், கைபை உள்ளிட்டவற்றை தவறவிட்டு கண்ணீருடன் சென்ற நிலையும் ஏற்ப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்