மதுரையில் மனுக்களுடன் காத்திருந்த மக்கள் - காரிலிருந்து உடனடியாக இறங்கி மனுக்களைப் பெற்ற முதல்வர்

x

மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார். அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏராளமான மக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். இதனைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக காரை விட்டு இறங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்