கோடையை மறந்த சென்னை மக்கள் - ஒரே மழைதான் மொத்த ஊரும் கூல்..!

x

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்த‌தால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த‌தால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்திருந்த‌னர். இந்நிலையில், சென்னையில் நகரின் உள்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் கார்மேகம் சூழ்ந்து குளிர்ச்சியான காற்று வீசியது. எழும்பூர், சென்ட்ரல், வேப்பேரி, அண்ணாசாலை, அண்ணாநகர், வடபழனி, சாலிகிராம‌ம், புரசைவாக்கம், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்த‌து. திடீரென பெய்த மழையால் வெப்பம் தனிந்த‌து. இதனால், வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். இதே போன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்த‌தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்