அடிக்கும் வெயிலுக்கு குளிர்காய வரும் மக்கள்..அவதிப்படும் போலீசுக்கு உதவும் ட்ரோன் கேமரா

x

உதகையில் ட்ரோன் கேமிரா மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை சீசன் தொடங்கியுள்ள சூழலில், தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளனர். இதனால் உதகைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட போலீசார், ட்ரோன் கேமிரா உதவியுடன் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்