7 கிலோ மீட்டர் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள்! கலங்க வைக்கும் சம்பவம்..!

x

திருவண்ணாமலை மாவட்டம் எலந்தபட்டு கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சாலை வசதி இல்லாததால், அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எலந்தபட்டு கிராமத்தை சேர்ந்த பெண் உயிரிழந்த நிலையில், அமரர் ஊர்தியில் எடுத்துவரப்பட்ட அவரது உடல், சாலை வசதி இல்லாததால் படவேடு மலைப்பகுதியிலேயே இறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் கதறி அழுத அவரது உறவினர்கள், வேறு வழி இல்லாமல் டோலி கட்டி 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சடலத்தை சுமந்து சென்றுள்ளனர். இந்நிலையில், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்