வராகி வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பவன் கல்யாண்

x

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆந்திரா மாநிலம் அன்னவரம் கோயிலில் இருந்து நடிகர் பவன் கல்யாண் பரப்புரையை தொடங்கியுள்ளனார்.

தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, வராகி என்ற பெயரில் சிறப்பு பரப்புரை வாகனம் ஒன்றை அக்கட்சி தயார் செய்துள்ளது. கிழக்கு கோதாவரியில் உள்ள அன்னவரம் கோயிலுக்கு சென்ற பவன் கல்யாண், வீர வெங்கட சத்யநாராயண சுவாமியை வழிபட்டு, வராகி வாகனம் மூலம் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அப்போது, ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பவன் கல்யாணுடன் புகைப்படம் எடுக்க முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக வந்த போலீசார், பவன் கல்யாணை பத்திரமாக வராகி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்