பெண் ரயில்வே கேட்கீப்பருக்கு நள்ளிரவில் நடந்த கொடூரம்... 15 நிமிடம் போராடிய பெண் - தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

x
  • தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பிரதான ரயில்வே கேட் பகுதியில் பெண் ரயில்வே ஊழியருக்கு நடந்த சம்பவம் பலரையும் பதற வைத்திருக்கிறது...
  • கடந்த 16ஆம் தேதி ரயில்வே பெண் ஊழியர் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
  • பின்னர், தனது இச்சைக்கு உடன்படாததால், பெண் ஊழியரை அந்த நபர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது..
  • ஆனாலும் இடை விடாத முயற்சியால் அந்த நபரை சமாளித்து, சுமார் 15 நிமிடம் போராடிய பெண் ஊழியர், அங்கிருந்து தப்பித்து, வீதிக்கு வந்துள்ளார்.
  • பொதுமக்களைக் கண்டதும் அந்த நபர் தப்பித்து ஓடவே, அக்கம்பக்கத்தினர் காயமடைந்த நிலையில் இருந்த பெண் ஊழியரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
  • சிகிச்சைக்குப் பின் பேசிய பாதிக்கப்பட்ட பெண், தனது குடும்பத்தையும், எதிர்காலத்தையும் நினைத்து போராடாமல் இருந்திருந்தால், தற்போது உயிருடன் இருந்திக்க மாட்டேன் என கூறியது வேதனை அளித்தது.


பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்-

"சிசிடிவி இல்லை என்பது அந்த நபருக்கு தெரியும்"

"ஜன்னலை திறந்து கத்தினேன் - யாருக்கும் கேட்கவில்லை"

"எனது குடும்பத்தை நினைத்து போராடினேன்"

"போராடாமல் இருந்திருந்தால், இங்கு இருந்திக்க மாட்டேன்"


Next Story

மேலும் செய்திகள்