அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம் -மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

x

ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் சமூக வளைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கீழையூரை சேர்ந்த சங்கர் என்பவர் காலில் அடிபட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால் உடற்கூற ஆய்வு செய்யும் உதவியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்