பதிண்டா ராணுவ முகாம் -துப்பாக்கிச்சூடு சம்பவம்..இந்திய ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

x

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு வீரர் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும், இதற்கும் தொடர்பில்லை என்றும், உயிரிழந்த வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது போல் தெரிவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவ வீரரின் உடலுக்கு அருகிலேயே துப்பாக்கியும், தோட்டாவும் கண்டறியப்பட்டதாகவும், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தான், அந்த ராணுவ வீரர் தனது விடுமுறையை முடித்துக் கொண்டு பணியில் சேர்ந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.https://youtu.be/rAfpr8UbQrk


Next Story

மேலும் செய்திகள்