பயணிகளைக் கவரும் "பசுமை ஆட்டோ" - கொளுத்தும் வெயிலில் குளுகுளு பயணம்

x

திருப்பதியில் ஓட்டுனர் ஒருவர் செடி கொடிகளுடன் கூடிய உண்மையான பசுமை ஆட்டோவை ஓட்டி வருகிறார். இயற்கை ஆர்வலரான பாபு துவக்கத்தில் தன் ஆட்டோவில் ஓரிரண்டு செடிகளை வளர்த்து பராமரித்து வந்தார்... பயணிகள் பாராட்டவே உற்சாகம் அடைந்த பாபு, ஆட்டோ முழுவதையுமே பசுமை ஆட்டோவாக மாற்றி அசத்தினார். பசுமை ஆட்டோ பாபுவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் இந்த சூழலில் பகல் 11 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை பெரும்பாலும் அனைத்து ஆட்டோக்களும் மரத்தடியில் நின்று கொண்டிருக்க, பாபுவின் பசுமை ஆட்டோ மட்டும் திருப்பதி நகர வீதிகளில் நிற்காமல் சுழன்று கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்