வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தொல்லை... பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது மேலும் ஒரு பெண் புகார்

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய பாதிரியாரின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது இளம் பெண் பாலியல் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமறைவான பாதிரியார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதில், பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது போலீசில் புகாரளித்துள்ளார். புகாரில், கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட பாதிரியார், தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்