பேருந்தில் பயணிக்கும் போதே சோகம்.. தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த கண்டக்டர்.. அதிர்ச்சி சம்பவம்..!

x

கள்ளக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர், பேருந்தில் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்டுச் சென்ற அந்த பேருந்து, கள்ளக்குறிச்சி அருகே சென்றபோது, பேருந்தில் ஒருவர் கூடுதலாக இருப்பதாக பேருந்தின் நடத்துனர் ஜோதி கூறினார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த ஒரு பயணியை ஓட்டுனர் எழுப்ப முயன்றபோது, அவர் சரிந்து விழுந்துள்ளார். அவரை சின்ன சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பிரமணி என்பது தெரியவந்தது. அவருடைய உடலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக, கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்