தேவாலயத்தில் செம்ம விருந்து...! ஊர் கூடி உண்டு மகிழ்ந்த மக்கள் | Tiruchendur

x

திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் தேவாலயத்தில் அசன வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு, 176வது பிரதிஷ்டை பண்டிகையையொட்டி, கடந்த 10 நாட்களாக ஆலயத்தின் முன்புள்ள கலையரங்கில், பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான அசன வைபவம் எனப்படும், அன்னதானம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மத வேறுபாடின்றி ஒன்று கூடி, சிறப்பாக நடந்த இந்த வைபவத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உணவருந்தினர்.


Next Story

மேலும் செய்திகள்