இறந்தே விட்டதாக நினைத்த பெற்றோர் - பனியை சாப்பிட்டே உயிர் பிழைத்த சிறுவன்

x

அமெரிக்காவில் வனப்பகுதியில் காணாமல் போன சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், இரண்டு நாள்கள் பனியை சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளான். நன்டே நெய்மி என்ற 8 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன், அமெரிக்காவில் மிச்சிகன் பகுதியில் சுற்றுலா சென்ற போது காணாமல் போயுள்ளான். இதைத் தொடர்ந்து, போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், பார்குபைன் மலைப்பகுதி அருகே சிறுவனை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவன், தான் நீர்ச்சத்துடன் இருப்பதற்காக இரண்டு நாள்களும் பனியை சாப்பிட்டதாகவும், பெரிய மரக்கட்டையின் கீழ்ப்பகுதியில் பதுங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளான்.


Next Story

மேலும் செய்திகள்