வாய்க்காலில் மகள் இறந்து கிடந்தது தெரியாமல் தேடி வந்த பெற்றோர் - மழை வெள்ளத்திற்கு இடையே சோகம்

x

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமம், மேலத்தெருவை சேர்ந்த ராமன், சங்கீதான தம்பதியின் மகள் ஹர்ஷிதா, அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டுக்கு அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டின் பின்புறம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்காலில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்தார். மகளைக் காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது, வாய்க்காலின் ஓரத்தில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த வந்த கொள்ளிடம் போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்