மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்

x

ராமநாதபுரம் அருகே, பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் தலைமை ஆசிரியரை, உடனடியாக பணியிடை மாற்றம் செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவயல் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு உறுதுணையாக ஆங்கில ஆசிரியரும் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து 2 பேர் மீதும், மாணவிகளின் பெற்றோர் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், அவரை பணியிடை மாற்றம் செய்யக் கோரியும், 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்