பெற்றோர் கடும் எதிர்ப்பு... காதலர்களுக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்த போலீசார்.

x

பெற்றோர் எதிர்ப்பதால் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிக்கு, போலீசாரே கோயிலில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.

நெலமங்கலா பகுதியை சேர்ந்த பிந்து என்ற இளம்பெண்ணும், கருபசப்பா என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, நெலமங்களா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடியின் புகாரை விசாரித்த போலீசார், அவர்களின் பெற்றோரை வரவழைத்து சமாதானம் பேசியுள்ளனர். அப்போது பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி இருவரையும் கோயிலுக்கு அழைத்து சென்ற போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர், இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அறிவுறுத்திய போலீசார், காதல் தம்பதியினரை துன்புறுத்த கூடாது என எச்சரித்து, பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்