கோமாவில் இருக்கும் பிள்ளையை தவிக்க விட்டு பெற்றோர் தலைமறைவு

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கோமாவில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டரை வயது குழந்தையை தவிக்கவிட்டு , பெற்றோர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த சக்திவேல் மற்றும் ஹேமலதா இரண்டரை வயது பெண் குழந்தையுடன் ஆலங்குலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இருவரும் தினக்கூலியாக வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்ததாக கூறி , ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர். குழந்தை சுயநினைவு இழந்ததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோர் திடீரென தலைமறைவாகியுள்ளனர். இந்த நிலையில், இருவரும் குழந்தையின் உண்மை பெற்றோர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்