மும்பையில் இருந்து வரும் பார்சல்..கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை - சிக்கிய மருந்தக விற்பனையாளர்

x

மும்பையில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த மருந்தக விற்பனையாளர் உட்பட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நவல்பூர் பகுதியில் இயங்கும் மருந்தக கடையில், விற்பனையாளராக உள்ள பால் சுனில் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பால் சுனில், தனது நண்பர்களான முகமது அமீன் மற்றும் தனுஷ் ஆகியோருடன் சேர்ந்து, போதை மாத்திரைகளை, மும்பையில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம் வரவழைத்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் 300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்