பரந்தூர் - விமான நிலையம்.. இரவில் திடீரென திரண்ட மக்கள் - பரபரப்பு சம்பவம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இரவு நேரத்திலும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மேலேரி, ஏகனாபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு, பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, வலியுறுத்தினர். 60ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய, மாநில, அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்