பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து.. குளிர்,பனியிலும் முதியோர், பெண்கள் ௧டும் போராட்டம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 130ஆவது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஊர் மைதானத்தில் ஒன்று கூடி, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

மேலும், விமான நிலையம் அமைக்க வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

130ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில், கடும் குளிர், பனியை பொருட்படுத்தாமல் முதியோர், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்