சமையல் மாஸ்டரை சுட்டு கொன்ற துணை ராணுவ படை வீரர் - மயிலாடுதுறையில் பயங்கரம்

x

சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கனிவண்ணன். சமையல் மாஸ்டரான இவர் கடந்த 2 ஆம் தேதி சீர்காழி, உப்பனாற்று கரையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சீர்காழி ஆர்.வி.எஸ் நகரை சேர்ந்த மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், தேவேந்திரனின் வீட்டை சோதனை நடத்திய அதிகாரிகள், உரிய அனுமதி பெறாமல் வைத்திருந்த கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்த நிலையில், தேவேந்திரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்