மதுவால் நேர்ந்த கொடுமை... "தினம் தினம் டார்ச்சர்"... தீக்குளித்த மனைவி, கணவனுக்கும் வைத்த 'தீ'- பண்ருட்டி அருகே அதிர்ச்சி

x
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மதுவுக்கு அடிமையான கணவருடன் ஏற்பட்ட தகராறில், கணவன், மனைவி இருவரும் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
  • தோப்புக்கொல்லையைச் சேர்ந்த அருள் தினமும் குடித்து விட்டு மனைவி முத்துலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அருள் மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால், மன வேதனை அடைந்த முத்துலெட்சுமி, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார்
  • . இதனை பார்த்த கணவர் அருளும், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட போது, மனைவி தீ வைத்துள்ளார்.
  • தீயில் இருவரும் அலறி துடித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்