கடையின் பூட்டை உடைத்து கொள்ளை.. களவாடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம் - கத்தை கத்தையாக பணத்துடன் ஓடிய சிசிடிவி காட்சி

x
  • பண்ருட்டியில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர் அந்த பணத்தை துணை நடிகைகளிடம் கொடுத்து உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்திருக்கிறது.
  • பண்ருட்டியை சேர்ந்த சுந்தர் என்பவர் விதைகள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடை நடத்தி வரும் நிலையில் அவரது கடையில் கடந்த 10ஆம் தேதி கொள்ளை நடந்தது.
  • லாக்கரில் இருந்த 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சூழலில் போலீசார் கொள்ளையனை தேடி வந்தனர்.
  • அப்போது கேரளாவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் இதில் ஈடுபட்டது உறுதியான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
  • அப்போது அவர் வசமிருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள பணத்தை அவர் கேரளாவில் துணை நடிகைகளுக்கு செலவிட்டது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்