மொத்த சைடிஷையும் காலி செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை அடித்தே கொன்ற நண்பர்கள் - பண்ருட்டி அருகே அதிர்ச்சி சம்பவம்

x

கடலூர் மாவட்டத்தில் மது அருந்திய இளைஞர்கள், சைடிஷ் முழுவதையும் காலி செய்த நண்பனை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அருகே நடுமேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவர் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி காட்டாண்டிக்குப்பத்தில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

அப்போது, சைடிஷாக வாங்கிய மட்டன் வறுவலை மற்றவர்களுக்கு வைக்காமல் சிவக்கொழுந்து காலி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அவரது நண்பர்களான அபினேஷ், கார்மேகம் ஆகிய இருவர் சிவக்கொழுந்தை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உடலை சாலையில் போட்டு விபத்தில் உயிரிழந்ததாக இருவரும் நாடகமாடிய நிலையில், சிவக்கொழுந்தில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிய அபினேஷ், கார்மேகம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்