பல்தான்ஸ் அணியை பந்தாடிய குஜராத்.. OFF செய்து உட்கார வைத்த ஆல்ரவுண்டர் பாண்டியா

x

ஐபிஎல் தொடரின் 35வது ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்தார். மேலும் மில்லர் 46 ரன்களும், அபினவ் மனோகர் 42 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில், எந்த பேட்டரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் அந்த அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா, 40 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்