ஊர் முழுவதும் ஊராட்சி தலைவர் ஒட்டிய போஸ்டர்... மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

x

மதுரை மாவட்டம் கரி சல்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரிசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கூடும் பகுதிகளில் மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தீர்மானத்தை மீறி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மது உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீது மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் ஆனது, பொதுமக்களிடையே வரவேற்பையும், மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்