ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு அருவாமனை காட்டி பகீரங்க கொலை மிரட்டல் - பரபரப்பு காட்சிகள்

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, ஊராட்சி மன்ற துணைத் தலைவரை, அருவாமனையை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லிசேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவரான காசிராஜன் என்பவர், சாலை மற்றும் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார்.

இந்த ஆக்கிரமிப்பு பணியின்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரது நிலத்தின் பகுதியையும் அகற்றியதாக கூறப்படுகிறது.

இதில் கோபமடைந்த வெங்கடாஜலபதி, காசிராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், அருவாமனையைக் கொண்டு மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்