சிஐஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சி... வடமாநில தொழிலாளரின் காலில் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு

x

பல்லாவரம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பயிற்சியின்போது, கட்டிட தொழிலாளியின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி இனசேர் ஆலாம். இவர் சென்னை திரிசூலம் பகுதியில் கட்டிட பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலில் பாய்ந்திருந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குட்ட மலை பகுதியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இனசேர் ஆலாமின் காலில் குண்டு பாய்ந்தது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்