"வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி வாங்குன வீடு..." "உரிமையாளரை விரட்டி புதுவீட்டை ஆக்கிரமித்த கூலிப்படை.."... கண்ணீர் வடிக்கும் விவசாயி

x
  • பல்லடம் அருகே கூலிப்படையினரை குடி வைத்து புது வீட்டை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
  • திருப்பூர் மாவட்டம் எலவந்தி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ் குமார், தனபால் என்பவரிடம் இருந்து புதிய வீட்டை வாங்கியுள்ளார்.
  • இந்த நிலையில் தனது புது வீட்டை பார்வையிட சென்ற அவர், அங்கு 20க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • வீடு தன்னுடையது என்று கூறியும் அதனை அவர்கள் மறுத்துள்ளனர்.
  • மேலும், மங்கலத்தை சேர்ந்த ஆனந்த், பத்மநாபன் மற்றும் மகேந்திரன் ஆகியோருக்கு இந்த வீடு சொந்தமானது என்றும், அவர்களே தங்களை இங்கு தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
  • இதனை தொடர்ந்து தனது வீட்டை ஆக்கிரமித்து கூலி படையினரை குடி வைத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜேஷ்குமார் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்