பட்டப்பகலில் ஓட்டை பிரித்து அரிவாளுடன் கெத்தாக வீட்டில் இறங்கிய கொள்ளையன் - கடைசியில் காலை வாரிவிட்ட பிளான்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்ற நபரை, பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜினி என்பவர், கோவையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்

. இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பட்டப்பகலில், அவரது வீட்டின் ஓட்டை பிரித்து கையில் அரிவாளுடன் வீட்டின் உள்ளே இறங்கியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதில் ஒரு நபர் சிக்கிய நிலையில், மற்ற கொள்ளையர்கள் தப்பியோடினர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் மேட்டூரைச் சேர்ந்த ஈஸ்வரன் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, ஈஸ்வரனைக் கைது செய்த போலீசார், தப்பிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்