பள்ளிக்குள் புகுந்த 'கொம்பேறி மூக்கன்'... கண்டதும் அலறியடித்து ஓடிய மாணவர்கள்... பழனியில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி கடைவீதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது, வகுப்பறைக்குள் திடீரென்று பாம்பு புகுந்ததால், சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். தலைமை ஆசிரியர் அளித்த தகவலின்பேரின், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். இந்த பாம்பு, கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்