அரசு மருத்துவமனைக்குள் தூக்கிட்டு கொண்ட நபர் - பழனியில் பரபரப்பு சம்பவம்

x

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தினுள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியை சேர்ந்தவர் சரவணபாரதி.

இவர் கோவையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், சமீப காலமாக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் சரவணபாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், உயிரிழந்த சரவணபாரதிக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்