பழனி அரசு மருத்துவமனை மருத்துவரை கட்டிப்போட்டு 100 சவரன் நகை கொள்ளை!

x

பழனியில் தலைமை மருத்துவரை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழனி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருபவர் உதயக்குமார். இவர் அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இவரை கட்டிப்போட்டு100 சவரன் நகை, 20 கிலோ வெள்ளிப்பொருட்கள், 24 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கடந்த 14ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலீசார் எருமைக்கார தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 34 கிராம் எடை கொண்ட 3 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்