அடுத்த ஜல்லிக்கட்டுக்கு ரெடியா..? போட்டிக்கு தயாரான பாலமேடு..

x

அடுத்த ஜல்லிக்கட்டுக்கு ரெடியா..? போட்டிக்கு தயாரான பாலமேடு..


மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும் நிலையில், போட்டியில், 300 வீரர்கள் 1000 காளைகளுடன் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது

பாலமேடு மஞ்ச மலை ஆற்றின்கரையின் இருபுறங்களிலும் இரண்டடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, வாடிவாசல் தயாராக உள்ளது.

பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக இருபுறமும் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாடுபிடி வீரர்களுக்கு காலை உணவு, குடிநீர் வசதி என அனைத்து வித வசதிகளும் தயாராக உள்ளன.

போட்டியில் 300 மாடுபிடி வீரர்களும் 1000 காளைகளும் பங்கேற்கின்றனர்.

சிறந்த வீரர் மற்றும் சிறந்த காளைக்கு கார், டூவிலர், தங்ககாசு, டிவி, பிரிட்ஜ், அண்டா, சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்த காவல்துறை முடிவு செய்துள்ளனர்.

காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை போட்டி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்