'லஞ்சம் வாங்கிய அதிகாரி' - ஆப்பு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை

x

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்

. பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், அரூரை சேர்ந்த குப்புசாமி என்பவர், சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், குப்புசாமி தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் பெற முயற்சித்து வந்த நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் இளநிலை உதவியாளர் தனபால் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் குப்புசாமி அளித்த புகாரின் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்