தோனியை புகழ்ந்த பாக்.வீரர்

x

ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல்லில் மூன்று தொடர்களில் சென்னை அணியை வழிநடத்திய தோனி, இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடியிருக்கலாமா என வாசிம் அக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தோனி நினைத்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடியிருக்கலாம் எனவும், ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதுதான் தோனி ஸ்டைல் எனவும் புகழ்ந்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்கு ஐந்து கோப்பைகளை வென்றுகொடுத்தது அசாத்திய சாதனை என புகழ்ந்த அக்ரம், நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்