எல்லையில் அத்துமீறி நுழையும் பாக். 'ட்ரோன்கள்' நடு வானிலேயே சுட்டு வீழ்த்தும் இந்திய ராணுவம்

x

இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும், பாகிஸ்தான் ட்ரோன்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது.

பஞ்சாப் எல்லையில் அனுமதியின்றி பறந்த ஆளில்லா ட்ரோனை, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட ட்ரோனில் பதிவான விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்த ட்ரோன்களின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 311ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 104ஆக இருந்த நிலையில், மும்மடங்காக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 164 ட்ரோன்களும், ஜம்முவில் 35 ட்ரோன்களும், ராஜஸ்தானில் 32 ட்ரோன்களும் அத்துமீறி பறந்துள்ளன. இதனிடையே, சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்களில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள் மற்றும் போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக, எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்