பாக். எல்லையில் ஆப்கன் படை குண்டு வீசி தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு.. 17 பேர் படுகாயம்

x

பாகிஸ்தான் எல்லையில் ஆப்கன் படை குண்டுவீசி தாக்கியதில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பலோசிஸ்தான் மாகானத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சாமன் அருகே ஆப்கன் படை புதிய சோதனைச் சாவடி அமைத்துள்ளது.

அதனை அகற்ற வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்திய நிலையில், இருநாட்டு வீர‌ர்களுக்கும் குண்டு வீசி தாக்கிக் கொண்டனர்.

ஆப்கன் படையின் குண்டுவீச்சில், 6 பாகிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஒரு ஆப்கன் வீர‌ர் கொல்லப்பட்டதாகவும், 3 ராணுவ வீர‌ர் உட்பட 10 பேர் படுகாயமடைந்த‌தாகவும் ஆப்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்