வீட்டைவிட்டு பெற்றோரை துரத்திய மகன்.. சப்-கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த வயதான தம்பதியினர், மூத்த மகன் இறந்த நிலையில், 2-வது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் மனைவியின் பேச்சை கேட்டு மகன் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக, முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்ட தீர்ப்பாயத்தில் தம்பதியினர் புகார் அளித்தனர்.

மனுவை பரிசீலனை செய்த பத்மநாபபுரம் சப்-கலெக்டர், மகனுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்துக்களை ரத்து செய்தார்.

மேலும் பெற்றோரை தொந்தரவு செய்தால், மகன் மீது போலீசார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்