சாலையில் இறங்கிய படையப்பா யானை....வழிமறித்த ஜீப் ஓட்டுநர்...ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற படையப்பா

x

கேரள மாநிலம் மூணாறில் படையப்பா எனப்பெயரிடப்பட்டுள்ள காட்டு யானை மீண்டும் தனது அட்டகாசத்தைத் துவங்கியுள்ளது... மூணாறு சுற்றுப்பகுதிகளில் உலா வரும் படையப்பா யானை, கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது... நேற்று மாலை குட்டியார்வேலி பகுதியில் இறங்கிய படையப்பாவை சாலையில் செல்ல விடாமல் ஜீப் ஓட்டுநர் ஒருவர் சாலையின் நடுவில் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த படையப்பா அங்கு சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியது. மேலும் ஜீப்பையும் சேதப்படுத்திய பின் ஆத்திரம் தணிந்து வனப்பகுதிக்குள் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்