சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்!! போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

x

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்!! போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பெண் பேராசிரியரை கைது செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பச்சையப்பா கல்லூரியில் தமிழ் துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் அனுராதா, மாணவர்களிடையே சாதிய ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்தது.

இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தினுள் பேராசிரியர் அனுராதா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் போராட்டம் நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்